Home இலங்கை மேல் மாகாணத்தில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

மேல் மாகாணத்தில் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

0

இன்று (புதன்கிழமை) காலை மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்

பதவி உயர்வில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதாகவும் எவ்வாறாயினும் குறித்த அமைச்சரவை அனுமதியில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக 13, 000 தாதியர்களுக்கான பதவி உயர்வு இல்லாமல் போயுள்ளதாகவும் சுகாதார துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இதற்கு முன்னரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version