தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் மற்றும் சிறுமியின் சடலங்கள் !

பொஹெம்பியகந்த பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்,பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் . சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் 20 வயதுடைய இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையின் விசாரணையின் போது தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இருவரும் காதலர்கள் என கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version