Home உலகம் இந்தியா சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு!

சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு!

0

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது மகாராஷ்டிரா பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொலிவுட் இயக்குனரான சுனில் தர்ஷன் தயாரித்து இயக்கியுள்ள Ek Haseena Thi Ek Deewana Tha என்ற திரைப்படத்தை உரிமம் இன்றி சட்டவிரோதமாக யூடியூப்பில் வெளியிட அனுமதித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை கூகுள் நிறுவனத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்ட போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version