Home இலங்கை முல்லை நோக்கி ஆரம்பமான 13ஐ நிராகரிக்கும் பவனி!

முல்லை நோக்கி ஆரம்பமான 13ஐ நிராகரிக்கும் பவனி!

0

இன்று(27) வவுனியாவிலிருந்து 13க்கு எதிரான விழிப்புணர்வு ஊர்தி ஆரம்பமாகியுள்ளது.இவ் ஊர்தி வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தியை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரசபையின் முன்பாகவுள்ள பொங்குதமிழ் தூபியில் காகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கற்பூரம் ஏற்றப்பட்டு ஊர்தி பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஊர்தி சென்ற போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்ததுடன் வவுனியா நகர் வழியாக ஊர்தி முல்லைத்தீவை நோக்கி சென்றது.

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version