Home இலங்கை கொரோனா பரிசோதனை நடாத்த மயானத்தை தெரிவு செய்த ஊழியர்கள்..!

கொரோனா பரிசோதனை நடாத்த மயானத்தை தெரிவு செய்த ஊழியர்கள்..!

0

இலங்கையில் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கெஸ்பேவ பிரதேசத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மயானம் ஒன்றை தெரிவு செய்தமைக்கு தமது கவலையை தெரிவித்துள்ளனர்.

இங்கு அடின்டிஜன் சோதனைக்கு 85 பேர் மற்றும் பிசிஆர் சோதனைக்கு பதினேழு பேர் வந்திருந்தனர்.

பலர் தங்கள் வாழ்க்கையை குறைத்து மதிப்பிடும் வகையில், கொரோனா பரிசோதனைக்கு மயானத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்காது என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நந்தனி சோமரத்ன தெரிவிக்கையில், உண்மையில், ஏனைய நாட்களில், கெஸ்பேவ தர்மசேன ஆட்டிகல மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், சிறுவர்களை விளையாடச் சொல்லி, சோதனைகள் நடத்தப்பட்டன. பெரும்பாலான குழந்தைகள் கெஸ்பேவவில் உள்ள மற்ற விளையாட்டு மைதானங்களில் மாலை நேரங்களில் விளையாடுகின்றனர்.

எங்கள் மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது, அதனால்தான் நான் இந்த இடத்தை தேர்வு செய்தேன் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version