அபாய வலயமாக யாழ். மாவட்டம்!!!!

வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.

எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது மாவட்டத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கூறியுள்ளார்.

Exit mobile version