தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளுடன் 34 வயதுடைய நபர் கைது

அநுராதபுரத்தில் புத்தளம், பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய போது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து வெவ்வேறு வகையைச் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள் அடங்கிய 517 பைக்கற்றுகளும், க்ளைஃபோசெட் களைக்கொல்லி அடங்கிய 230 பைக்கற்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் அநுராதபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version