மின்தூண்டிலினால் மீன்பிடித்த மீனவர்கள் கைது

இன்று காலை பேருவளை பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மின்சாரத்தூண்டில்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒன்பது மீனவர்களை கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட மின்சார தூண்டில்களை பயன்படுத்துவதனால் அரியவகை மீனினங்கள் மற்றும் அழியும் தருவாயிலுள்ள மீனினங்கள் என்பன பெருமளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version