யானைக் குட்டியை பயமுறுத்தி டிக் டொக் செய்த நபர் கைது

மின்னேரிய தேசிய பூங்காவின் பாதுகாவலர் உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது,திருகோணமலை ஹபரணை வீதியில் யானைக் குட்டி ஒன்றை பயமுறுத்தி துன்புறுத்தும் வகையில் டிக் டொக்கில் காணொளி செய்து வெளியிட்ட சாரதி வன ஜீவராசி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகநபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், 2,00,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

பிரபல ஹொலிவூட் திரைப்பட நடிகர் லியனாடோ டிகெப்ரியோ, இலங்கையில் காட்டு யானைகளுக்கு ஏற்படும் துயரமான நிலைமையை குறித்து தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

இலங்கையில் மனிதர்கள் தூக்கி எறியும் மக்காத குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு செல்லும் காட்டு யானைகள் அவற்றை உண்டு மரணிப்பது தொடர்பான விடயத்தை அவர் உலகத்திற்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version