Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-02-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-02-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, வித்தியாசமான அணுகுமுறையால் எதிலும் வெற்றி கிட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.

கடக ராசி

நேயர்களே, பெற்றோருடன் கருத்து வேறுபாடு வந்து போகும். ஞாபக மறதித் தொந்தரவு அகலும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவு காத்திருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

விருச்சிக ராசி

நேயர்களே, உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் மன மகிழ்ச்சி உண்டாகும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

தனுசு ராசி

நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். எதிர்காலம் பற்றிய கனவுகள் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். .

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தினர் பாச மழை பொழிவர். மனதில் நினைத்தது நிறைவேறும். புது நண்பர்களுடன் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கும்ப ராசி

நேயர்களே, நம்பியவருக்கு நல்லுதவி செய்ய முடியும். சொந்த பந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version