தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் இரண்டை நீக்கியது

இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி சின்னங்களை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்கவினால் (Saman Sri Ratnayake) வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சின்னங்களும் முன்னர் “அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை” என்ற வகையின்கீழ் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுடன் ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

Exit mobile version