Home இலங்கை மின்வெட்டு-ஆரம்பித்த மோதல்

மின்வெட்டு-ஆரம்பித்த மோதல்

0

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் மின்சாரத்தை துண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மின்சாரசபை பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version