அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது !

நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version