எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழப்பு !

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 285 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு ஜெனரேட்டர்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.

இதனை இலங்கை மின்சார சபையின் செயற்குழு உறுப்பினர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் இன்று பிற்பகல் விநியோகிக்கப்படவுள்ளதுடன், மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version