Home இலங்கை மின்சாரம் தடைப்படாத இடங்கள் குறித்து வெளியான தகவல்!

மின்சாரம் தடைப்படாத இடங்கள் குறித்து வெளியான தகவல்!

0

நாட்டில் மின்சார விநியோகம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சுழற்சி முறையில் இன்றைய தினமும் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே 5 மணித்தியால மின்விநியோக துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோன்று கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரையான பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version