ரஷ்யா – உக்ரைன் போரால் இலங்கைக்கு வந்த சோதனை

இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்தின் பெரும்பகுதி பெலாரஸ் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதன்படி ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை பொட்டாஷ் உரங்களை இறக்குமதி செய்வதில் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களம் கடந்த மஹா பருவத்தை போன்று எதிர்வரும் யாலா பருவத்திற்கும் பொட்டாஷ் உரத்திற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த உரத்தை அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ரஷ்ய – உக்ரைன் யுத்த சூழ்நிலை காரணமாக பெலாரஸ் துறைமுகங்கள் ஊடாக பொட்டாஷ் உரத்தை ஏற்றுமதி செய்வது தாமதமாகியுள்ளதாக கொழும்பு வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொட்டாஷ் உரங்கள் உட்பட ஏனைய உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மாற்று முறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

Exit mobile version