Home இலங்கை தங்கத் தீவிற்கு புதிய பாலம்- கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!

தங்கத் தீவிற்கு புதிய பாலம்- கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு!

0

மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவிற்கு (புறாத் தீவு) செல்வதற்கு புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும்

தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த தீவுக்குச் செல்ல முடியாதுள்ளதாக சங்கைக்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர் அரசதலைவருக்கு அறிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறியிற்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக அரச தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை தங்கத் தீவுக்கு புதிய பாலம்... - மலையகம்.lk

சியம் மஹா நிகாயாவின் ரோஹண தரப்பின் உபோஸதாகாரய வளாகம் அமைந்துள்ள இந்தத் தீவு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஒரு இடமாகும்.

அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இன்று குறித்த இடத்திற்குச் சென்று நிர்மாணப் பணிகளை பார்வையிட உள்ளதாகவும், பாலத்தின் நிர்மாணப் பணிகளை 06 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version