Home இலங்கை எரிபொருள் தொடர்பாக மகிழ்ச்சியான தகவல்

எரிபொருள் தொடர்பாக மகிழ்ச்சியான தகவல்

0

இலங்கையில் எரிபொருள் விநியோகம் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) வழமைக்கு திரும்புமென எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஆயினும், நேற்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அதிக தேவை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்புகளை மட்டுமே தொடர்ந்து விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version