நாளை பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் பாரிய போராட்டம்

நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில்
அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

” ஜனாதிபதி இருக்கும் இடத்தை தேடிச்செல்வோம். ஒரு மாதம் அவகாசம் வழங்குவோம். அதற்குள் தீர்வு இல்லையேல் போராட்டம் வலுவடையும். அரபு வசந்தத்தையும் விஞ்சும் வகையில் எமது நடவடிக்கை அமையும். ”

என்றும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார். கொரோனாவால் அல்ல, அரசின் செயற்பாடுகளால்தான் நாடு இந்நிலைமையை எதிர்கொண்டுள்ளது எனவும் ஹரின் குறிப்பிட்டார்.

Exit mobile version