இலங்கையில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் 40 வீதத்தினால் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையிலேயே, ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ற வசதியான சேவையை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version