Home இலங்கை எரிபொருளிற்காக வரிசையில் நோயாளர் காவுவண்டிகள்

எரிபொருளிற்காக வரிசையில் நோயாளர் காவுவண்டிகள்

0

அரசமருத்துவ உத்தியோகத்தர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலார அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாத நிலையில் சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சுகாதார சேவையை அத்தியாவசிய சேவை என அறிவித்துள்ள போதிலும் எரிபொருள் தட்டுப்பாட்டின் மத்தியில் அம்புலன்ஸ்களிற்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், அம்புலன்ஸ்களும் ஏனைய வாகனங்களுடன் நீண்ட வரிசையி;ல் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளிற்கு மாற்றும் நடவடிக்கை அம்புலன்ஸ்களிற்கு எரிபொருள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

சுகாதார பணியாளர்கள் தனியார் போக்குவரத்து சேவையையே பின்பற்றுவார்கள், எரிபொருள் பற்றாக்குறையும் கட்டண அதிகரிப்புகளும் அவர்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version