பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற கபடிப் போட்டியில் விருதை பெற்ற மட்டக்களப்பு இளைஞன்

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது சுற்று போட்டி இன்று ஞாயிற்றுகிழமை (20-03-2022) இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்றது இந்த போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆட்ட நாயகனாக தெரிவாகியுள்ள தனுசன் (Thanushan) அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு மேலும் பல சாதனைகள் புரிய அவரை மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் (Thiyagarajah Saravanapavan) முகநூலில் வாழ்த்தியுள்ளார்.

Exit mobile version