ஓமானின் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

நேற்றிரவு (26) இலங்கையை ஓமானின் கடனுதவியுடன் 3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு இறக்கும் பணி இன்று (27) பிற்பகல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூடப்படும் கெரவலப்பிட்டிய லிட்ரோ கேஸ் நிலையம் இன்று வழமை போன்று இயங்குவதாகவும், 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version