கொழும்பு பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

கொழும்பு இன்று காலை 10.30 மணிக்கு பங்குச் சந்தை ஆரம்பமாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்கு வர்த்தகம் சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் காலை 10.38 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, 11.08 மணிக்கு பங்குச் சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை குறியீடு 358.64 புள்ளிகள் சரிந்து 9,288.91 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 184.70 புள்ளிகள் சரிந்து 3,153.33 புள்ளிகளாகவும் காணப்பட்டன.

மேலும் இது முந்தைய நாளைக் காட்டிலும் 3.72% மற்றும் 5.53% வீழ்ச்சியாகும்.

Exit mobile version