13 , 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டுக்கு சாத்தியம் இல்லையா??

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல், நீர் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஓரளவு மழை பெய்தது இதற்கு ஒரு காரணம் என அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version