16 வயது சிறுவன் தற்கொலை!

உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார்.

நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.

இதனால், தாயார் கண்டித்ததுடன், கையடக்க தொலைபேசி பாவிக்க கட்டுப்பாடு விதித்துள்ளார்.

இந்த காரணத்திற்க்காக சிறுவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெல்தெனிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது மரணத்திற்கான காரணம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version