போராட்டதில் இணைந்த திருமண தம்பதியினர்

நாடளாவிய ரீதியில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள்
இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக கொழும்பு காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய போராட்டக் களத்திற்கு திருமணமான தம்பதியினர் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version