Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-04-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-04-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-04-2022)

மேஷ ராசி

நேயர்களே, எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். கடின முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி

நேயர்களே, தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

கடக ராசி

நேயர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்ம ராசி

நேயர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி ராசி

நேயர்களே, தெய்வவீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி

நேயர்களே, விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். மனதில் இருந்த வீண் கவலை அகலும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து இரண்டும் உயரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி

நேயர்களே, மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். சொந்த பந்தங்கள் உதவி கேட்டு வருவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி

நேயர்களே, அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். . தொழில், வியாபாரம் சிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version