சுகயீனம் காரணமாக உயிரிழந்த 18 வயது மாணவி

யா / நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் கரவெட்டி கிழவிதோட்டத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா வயது 18 என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று குளித்து விட்டு வீட்டில் படுத்த போது முக்கினூடாக இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Exit mobile version