Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-04-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-04-2022)

0

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். முன் கோபத்தை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்

ரிஷப ராசி

நேயர்களே, புது முயற்சிகள் கைகூடும். நட்பு வழியில் செலவினங்கள் அதிகரிக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, முக்கிய காரியங்கள் நிறைவேறும். நெருங்கிய உறவினர்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அசதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

நேயர்களே, விலகி நின்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப பாரம் பாதியாக குறையும். மனம் தெளிவு பெரும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மனதில் சந்தோஷம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

தனுசு ராசி

நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பழைய பிரச்சனையில் ஒன்று தீரும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

மகர ராசி

நேயர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண விஷயத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version