100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி

கொக்கலை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version