இலங்கையில் 6 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்து அதிகரித்த கொரோனா..!!

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 61 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,006ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3,888 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version