Home இலங்கை வாழைச்சேனையில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள்

வாழைச்சேனையில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள்

0

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு என கூறியுள்ளது.

வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது, 31 வயதுடைய பெண் ஒருவர் 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version