101 வகையான மருந்துப் பொருட்களை அனுப்பும் இந்தியா

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இதனை இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமண உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு வரும் இந்திய கடற்படைக் கப்பலில் 101 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய பொதி அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றார்.

34 கோடி இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இந்தோனேஷியா அனுப்பவுள்ளதாகவும், அவை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version