நாளை பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும்!

இலங்கையில் நாளை நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், நாளைய தினம் தமது பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.

இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல நாளை சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இபோச தலைவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version