முதல் தடவையாக வங்குரோத்து நிலையில் இலங்கை..!

மே தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தற்போதைய அரசாங்கம் தள்ளியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் இயலாமை, அசமந்த போக்கு மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் காரணமாக நாடு இதற்கு முன்னர் எதிர்நோக்காத சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த முறை மே தினத்தை ‘கறுப்பு மே தினமாக’ கொண்டாடும் நிலைமை உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version