மதுபான சாலை தொடர்பில் வெளியான தகவல்

இன்று (01) நண்பகல் 12.00 மணி தொடக்கம் தொழிலாளர் தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை ம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அப்பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version