Home இலங்கை இலங்கையை பொறுப்பேற்க நாம் தயார் -ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையை பொறுப்பேற்க நாம் தயார் -ஐக்கிய மக்கள் சக்தி

0

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கையை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல தாம் வழி வகுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version