பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

மேலும் , கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாய்க்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

அதேவேளை பேருந்துகள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Exit mobile version