Home இலங்கை தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை முடக்கம்

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை முடக்கம்

0

இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை (9) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 17ஆம் திகதி பொதுமக்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
முடிவில்லா போராட்டமும் விடை கொடுக்கா அரசாங்கமும்!!
முடிவில்லா போராட்டமும் விடை கொடுக்கா அரசாங்கமும்!!
தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கிய சிறுமி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version