முதியவரின் உயிரை பறித்த பலாப்பழம்

வீட்டுக் காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய, கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த, 72 வயதுடைய, தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version