பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்ட கொழும்பு விமான நிலையம்

நேற்று (09) இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் மகிந்தவின் ஆதரவாளர்கள் புகுந்து குழப்பம் விளைவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று (09-05-2022) பிற்பகல் முதல் அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச தரப்பு முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது கொழும்பு ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளை க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version