இலங்கையை விட்டு ஓட மாட்டார் மஹிந்த! – நாமல் தெரிவிப்பு!

நாமல் ராஜபக்ச சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின் பிரதமராக வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமலின் இவ்வாறான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் பிரதமர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல திருகோணமலை கடற்படைத் தளம் சென்றதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளியானதையடுத்து, எதிர்ப்பாளர்கள் கடற்படைத் தளத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version