Home இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

0

கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக (கொழும்பில்) தமிழின படுகொலை நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

அதேசமயம் பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளதுடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளை கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கொழும்பில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version