பேருந்தில் பயணித்த குழந்தையொன்று கண்ணாடிக்கு வெளியே தலையை நீட்டிய போது ஏற்பட்ட துயரசம்பவம்

மாவனல்லை – ரம்புக்கன வீதியில் கிரிகல சந்திக்கு பேருந்தில் பயணித்த குழந்தையொன்று கண்ணாடிக்கு வெளியே தலையை நீட்டிய போது வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Exit mobile version