யாழ் விபத்தில் முல்லை மாவட்ட பாடசாலை அதிபர் மரணம்!

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உந்துருளியை பாரவூர்த்தி மோதிய விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version