மன்னாரில் இருந்து தங்கம் கடத்த முயன்ற மூவர் கைது

மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட சுமார் 2 கிலோ தங்கம் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் திருப்பி விடப்பட்ட படகை கடற்படையினர் தேடிய போதே தங்கம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்கம் ஒரு கிலோ 960 கிராம் எடை கொண்டது.

இதேவேளை, சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தங்கங்களுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version