இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதி
சாரதிகாயம் அடைந்துள்ளார்

இன்று காலை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துடன் ஆயிரக் கணக்கான லீட்டர் பாலும் வீதியில் கொட்டுப்பட்டது.

இந்த விபத்து சம்பவம் நெடுகேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கிச் சென்ற இராணுவ வாகனம், ஒட்டுசுட்டான் சம்மளம்குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென திருப்ப முற்பட்டது.

இந்த நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான லீட்டர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றி சென்ற வாகன சாரதி காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version