Home இலங்கை இலங்கையில் விரைவில் இதற்கும் வரிசைதான்

இலங்கையில் விரைவில் இதற்கும் வரிசைதான்

0

தற்போது நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுவிட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாண் மாவின் விலை அதிகரிப்பு இந்த நிலைமை ஏற்பட காரணம் என அவர் தெரிவித்தார்.

இதேநிலை நீடித்தால் பேக்கரி பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version