Home இலங்கை புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இரண்டு காட்டுயானைகள்..!

புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இரண்டு காட்டுயானைகள்..!

0

ஹபரனை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து ஒன்றுடன் காட்டுயானைகள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version